5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2012

5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு


5000 பணியிடங்களை நிரப்ப குரூப்-4 தேர்வு-24-02-2012

எழுத்தின் அளவு :
சென்னை: குரூப்-4 நிலையில், தமிழக அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்ற, 5,000 பேரை, டி.என்.பி.எஸ்.சி., தேர்வுசெய்ய உள்ளது.
இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது: நடப்பாண்டில், குரூப்-1 மற்றும் குரூப்-2 (பட்டதாரி தகுதி) தேர்வுக்குரிய காலியிட பட்டியல்கள் வந்துள்ளன. இதுதவிர, குரூப்-4 நிலையில், அரசின் பல்வேறு துறைகளுக்கு, 5,000 பேரை தேர்வு செய்யவும் உத்தரவு வந்துள்ளது.
தட்டச்சர்கள், இளநிலை உதவியாளர் உட்பட பல்வேறு பணிகளுக்கு, இவர்கள் தேர்வு செய்யப் படுவர். 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், போட்டித் தேர்வில் பங்கேற்கலாம்.
இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். ஏற்கனவே, வெளியான வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-2 தேர்வு முடிவில் இடம் பெற்றவர்களுக்கு, விரைவில் பணி நியமனம் வழங்கப்படும். இந்தத் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்படமாட்டாது.
டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வுகள், முடிவுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் உடனுக்குடன் வெளியிடுவதுடன், தேர்வு முடிவிற்குப் பின், அதற்கான விடைகளையும் இணையதளத்தில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட உள் ளது. இவ்வாறு, டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி