கன்னியாகுமரி குலுங்கியது 10 ஆயிரம் ஆசிரியர்கள் பேரணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 20, 2012

கன்னியாகுமரி குலுங்கியது 10 ஆயிரம் ஆசிரியர்கள் பேரணி

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மாநாட்டை முன்னிட்டு, கன்னியாகுமரியில் நேற்று மாலை 10 ஆயிரம் ஆசிரியர், ஆசிரியைகள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் 5வது அகில இந்திய மாநாடு கன்னியாகுமரியில் கடந்த 3 நாட்கள் நடைபெற்றது.நிறைவு நாளான நேற்று மாலை ஆசிரியர், ஆசிரியைகளின் பிரமாண்ட பேரணி நடந்தது. தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் முருக செல்வராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் அபிஜித் முகர்ஜி தொடங்கி வைத்தார். பேரணியில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். பேரணியில் தாரை தப்பட்டை முழங்க ஒயிலாட்டம், உருமி மேளத்துடன் தேவராட்டம், கோலாட்டம் போன்ற கலைநிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. பேரணியால் போக்குவரத்து 1 மணி நேரம் தடைபட்டது. டி.எஸ்.பி.பாலகிருஷ்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.நிறைவில் கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாநாட்டு வரவேற்பு குழுவின் மூத்த துணைத் தலைவரும் முன்னாள் எம்.எல்.சியுமான மாயவன் வரவேற்றார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சி.என்.பாரதி ஆகியோர் மாநாட்டு முடிவுகளை விளக்கினர். சி.ஐ.டி.யு தொழிற்சங்க தலைவர் ஏ.கே.பத்மநாபன், பி.கே.பிஜு எம்.பி., முன்னாள் எம்.பி. பெல்லார்மின், முன்னாள் எம்.எல்.ஏ லீமா ரோஸ், அனை த்து தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ராமச்சந்திரன், மதுரை காமராஜர் பல்கலை ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலாளர் மனோகர ஜஸ்டஸ் ஆகியோர் பேசினர். வரவேற்புக்குழு பொருளாளர் கே.பூபாலன் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி