23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 15, 2012

23 ஆயிரத்து 128 பேர் விரிவுரையாளர் தேர்வில் பங்கேற்பு

அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் உள்ள, 154 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வில், 23 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.தமிழகத்தில், அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 154 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை, ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. இப்பணியிடங்களுக்கான, தேர்வு,தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் நேற்று நடந்தது.இதற்கு, 26,328 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில், உரிய சான்றிதழ் மற்றும் ஆவணங்கள் இல்லாத, 12 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மீதமுள்ள,26,316 பேருக்கு, ஹால் டிக்கெட்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அனுப்பியது.இவர்களுக்கான தேர்வு, சென்னையில் ஏழு மையங்கள் உட்பட, தமிழகம் முழுவதும் 67 மையங்களில் நேற்று நடந்தது. காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் ஒரு மணி வரை 23,128 பேர்தேர்வு எழுதினர். தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களில் 3,188 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி