நாட்டில் நிலவும் மருத்துவர்:நோயாளி விகிதாச்சாரத்தை குறைக்க, மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளின் எண்ணிக்கையை 2 மடங்கு அதிகரிக்க மத்திய சுகாதார அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.வரும் 2021ம் ஆண்டில், MBBS இடங்களை 80,000 என்ற அளவிலும், முதுநிலை மருத்துவ படிப்பிற்கான இடங்களை 45,000 என்ற அளவிலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது 1:2000 என்ற அளவில் உள்ள மருத்துவர் நோயாளி விகிதாச்சாரத்தை, 1:1000 என்ற அளவில் மாற்றியமைக்க முடியும்.MBBS படிப்பில் 38,431 இடங்களையும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 22,806 இடங்களையும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவம் தொடர்பான நாடாளுமன்ற கன்சல்டேடிவ் கமிட்டி கூட்டத்தில், இத்தகவலை,அத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.தற்போதைய நிலையில், நாடெங்கிலுமுள்ள 335 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 41,569 MBBS இடங்களும்,22,194 முதுநிலை மருத்துவ இடங்களும் உள்ளன. இத்தகைய இடங்களில் அதிகமானவை, தென் மற்றும் மேற்கு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கே செல்கின்றன.ஏனெனில், 335 மருத்துவக் கல்லூரிகளில் 66% கல்லூரிகளும், தற்போதைய MBBS இடங்களில் 69% இடங்களும், தமிழகம், கர்நாடகம், கேரளம், ஆந்திரம், கோவா, மராட்டியம், குஜராத் மற்றும் ராஜஸ்தான் போன்ற தெற்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலேயே உள்ளன. அதேசமயம், மத்திய மற்றும் கிழக்கிந்திய மாநிலங்கள் மிக குறைந்தளவு கல்லூரிகளையும், மருத்துவ இடங்களையுமே கொண்டுள்ளன.
May 17, 2012
Home
kalviseithi
மருத்துவ படிப்புகளுக்கானஇடங்களை 2 மடங்கு அதிகரிக்க திட்டம்!
மருத்துவ படிப்புகளுக்கானஇடங்களை 2 மடங்கு அதிகரிக்க திட்டம்!
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி