சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் - ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 30, 2012

சட்டப் படிப்பிற்கான கவுன்சிலிங் - ஜூன் 30 ம் தேதி துவங்குகிறது!

பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்புக்கு, மாணவர் சேர்க்கை "கவுன்சிலிங்", ஜூன் 30ம் தேதி துவங்குகிறது.இதுகுறித்து, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணைவேந்தர் விஜயகுமார் கூறியதாவது: சென்னை, அம்பேத்கர் சட்டக் கல்லூரி உள்ளிட்ட, ஏழு அரசு சட்டக் கல்லூரிகளில், 2012 - 13ம் கல்வியாண்டுக்கான, ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்), பி.ஏ.பி.எல்., மற்றும் மூன்றாண்டு பி.எல்., (ஹானர்ஸ்), பி.எல்., பட்டப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்கள், 28ம் தேதி முதல் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருச்சி, கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியில் உள்ள, அரசு சட்டக் கல்லூரிகளிலும், சட்டப் பல்கலையிலும் விண்ணப்பங்களை பெறலாம்.ஐந்தாண்டு பி.ஏ.பி.எல்., பட்டப் படிப்பிற்கு, 1,052 பேரும், பி.ஏ.பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்பிற்கு 120 பேரும், மூன்றாண்டு பி.எல்., பட்டப் படிப்புக்கு 1,262 பேரும், பி.எல்., (ஹானர்ஸ்) பட்டப் படிப்புக்கு, 60 பேரும் சேர்க்கப்பட உள்ளனர்.ஐந்தாண்டு பட்டப் படிப்புக்கு விண்ணப்பங்களை ஜூன் 15ம் தேதியும்,மூன்றாண்டு பட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்களை ஜூன் 30ம் தேதிக்குள்ளும் சமர்ப்பிக்க வேண்டும்.பி.ஏ.பி.எல்., படிப்பிற்கு ஜூன் 30ம் தேதியும், பி.எல்., படிப்பிற்கு ஜூலை 16ம் தேதியும் "கவுன்சிலிங்" நடைபெற உள்ளது. இவ்வாறு விஜயகுமார்தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி