6 பாடங்களில் தோல்வி அடைந்தாலும் துணை தேர்வு எழுதலாம் : அரசு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 25, 2012

6 பாடங்களில் தோல்வி அடைந்தாலும் துணை தேர்வு எழுதலாம் : அரசு.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஜுன் மாதத்திலேயே தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்கு உடனடியாக துணைத் தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.பொதுவாக கடந்த ஆண்டு வரை அதிகபட்சமாக 3 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள் மட்டும் இந்த துணைத் தேர்வை எழுதி வரும்கல்வியாண்டிலேயே உயர்கல்வியைப் பெற வாய்ப்பு ஏற்பட்டது.ஆனால், இந்த ஆண்டில் இருந்து 6 பாடங்களிலும் தோல்வி அடைந்தவர்களும் துணைத் தேர்வு எழுதலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதன்படி, 1 பாடத்துக்கு ரூ.85 வீதம் 6 பாடங்களுக்கு ரூ.3354ஐ தேர்வுக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். மாணவர்கள் படித்த அல்லது தேர்வெழுதிய பள்ளிகளிலேயே விண்ணப்பங்களைப்பெற்று பூர்த்தி செய்து அளிக்கலாம். மே 28ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி