தொடக்க கல்வித்துறையில் தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளில் 34 உதவி தொடக்கக்கல்வி அதிகாரி (ஏ.இ.இ.ஓ.)பணி இடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது. பி.ஏ. பி.எட். அல்லது பி.எஸ்சி. பி.எட். கல்வித்தகுதி கொண்ட இந்த பதவிக்கு 68,536 பேர் விண்ணப்பித்தார்கள்.அவர்களில் 1,588 பேரின் விண்ணப்பங்கள் குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டன. 66,948 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 14-ந் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதியவர்கள் முடிவு எப்போது வெளியிடப்படும்? என்று ஆவலோடு எதிர்பார்த்து உள்ளனர்.இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, ``ஏ.இ.இ.ஓ தேர்வுக்கான விடைத்தாள்கள் கம்ப்ïட்டரில் மதிப்பீடு செய்யப்பட்டு, இதர அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டுவிட்டன. தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியிடப்படும்'' என்று தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை நம் இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
May 14, 2012
Home
kalviseithi
உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்.
உதவி தொடக்கக்கல்வி அதிகாரி தேர்வு முடிவு ஓரிரு நாளில் வெளியாகும்.
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி