சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 23, 2012

சிறப்பு துணைத் தேர்வுக்கு இன்றுமுதல் விண்ணப்பம்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுக்கு புதன்கிழமை (மே 23) முதல் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களும் சிறப்பு துணைத் தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம். சிறப்புத் துணைத்தேர்வு எழுத ஒரு பாடத்துக்கு ரூ.85-ம் கூடுதலாக எழுதும் ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50 சேர்த்துக் கட்ட வேண்டும். பள்ளி மாணவர்கள், இந்த மேல்நிலை சிறப்புத் துணைத்தேர்வுக்கு "நஏ' என்று குறிப்பிடப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே மே 23 முதல் மே 28 வரைபெறலாம். மே 28-க்குள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தைப் பணமாக பள்ளியில் செலுத்த வேண்டும். தனித்தேர்வர்களாக எழுதும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி