விடுமுறை நாட்களிலும் விண்ணப்ப விற்பனை உண்டு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2012

விடுமுறை நாட்களிலும் விண்ணப்ப விற்பனை உண்டு!

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம், விடுமுறை நாட்களிலும் வழங்கப்பட இருப்பதால், வேலை நாட்களில், காலை முதல் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.குடும்பத்துடன் வருகை:எம்.பி.பி.எஸ்., படிப்பிற்கான விண்ணப்பங்கள், வரும் 30ம் தேதிவரை வழங்கப்பட உள்ளன. முதல் நாளான, மே 15ம் தேதி மட்டுமே, தமிழகம் முழுவதும், 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விற்பனையாகி உள்ளன.மருத்துவப் படிப்பில் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர், முதல் நாளே விண்ணப்பத்தை வாங்க வேண்டும் என்ற ஆசையில், காலை 6 மணி முதலே காத்துக் கிடந்ததால்,வரிசை நீண்டு கொண்டே போனது. மருத்துவப் படிப்பு விண்ணப்பம் வாங்க வருபவர்களில் பலர், குடும்பத்துடன் வருவதை, வழக்கமாக கொண்டுள்ளனர்.விடுமுறை நாட்களிலும்...:இதுகுறித்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை, விண்ணப்பம் வழங்கப்படுகிறது.இதுதவிர, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளிலும், விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. வரும் 30ம் தேதி வரை விண்ணப்பம் வழங்கப்படுவதால், நீண்ட நேரம் வரிசையில் நின்று அவதிப்பட வேண்டியதில்லை.மேலும், ஒரு விண்ணப்ப படிவம் வாங்க, குடும்பத்துடன் சிலர் வருவதால், அதிக கூட்டம் இருப்பதைப் போல தோற்றம் அளிக்கிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் கூறினார். சென்னையில், விண்ணப்ப விற்பனை துவங்கிய இரண்டாம் நாளான நேற்று(மே 16ம் தேதி), அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில், வழங்கப்பட்ட விண்ணப்பங்கள் முழுவதும் விற்று தீர்ந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி