போட்டித் தேர்வில், தேர்வு செய்யப்பட்ட 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலர் (ஏ.இ.இ.ஓ.,) மற்றும் 33 முதுநிலை விரிவுரையாளர் ஆகியோருக்கு, வரும் 18ம் தேதி டி.ஆர்.பி., அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.மாநில ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், 33 முதுநிலை விரிவுரையாளரை நியமனம் செய்வதற்கான போட்டித் தேர்வு,மார்ச் 4ம் தேதியும், தொடக்க கல்வித்துறையில் பணியாற்ற 34 உதவி தொடக்கக் கல்வி அலுவலரை தேர்வு செய்வதற்கான தேர்வு, பிப்ரவரி 26ம் தேதியும் நடந்தன. இதன் முடிவுகள், கடந்த6ம் தேதி வெளியானது.இரு தேர்வுகளிலும், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, 18ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதில், ஏதாவது பிரச்னை இருந்தால், சம்பந்தப்பட்ட தேர்வரின் தேர்வு உத்தரவு நிறுத்தி வைக்கப்படும்.கல்வித் தகுதி மற்றும் சான்றிதழ்கள் சரியாக இருக்கும்பட்சத்தில், இறுதி தேர்வர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு டி.ஆர்.பி. அனுப்பி வைக்கும். 67 பேருக்கும், இம்மாத இறுதிக்குள் பணி நியமன உத்தரவுகள் வழங்கப்படும் என தெரிகிறது.
Jun 14, 2012
Home
kalviseithi
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு 18ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
Recommanded News
Related Post:
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி