சமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 18, 2012

சமச்சீர் கல்வியால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

சமச்சீர் கல்வி முறை அமலால், மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த கல்வியாண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி முறை அமலானது. இந்த முறையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் அரசுமற்றும் நகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் கூறினர்.இதுதொடர்பாக பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் குணசேகர் கூறுகையில், கடந்த ஆண்டுகளில் பெரும்பாலான பெற்றோர்கள் குழந்தைகளை மெட்ரிக் பள்ளிகளில் சேர்க்கவே ஆர்வம் காட்டினர்.சமச்சீர் கல்வி முறை அமலால் அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் ஒரேமுறையான பாடதிட்டம் என்பதால், பெற்றோர் பலர் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வந்துள்ளனர். இனிவரும் காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம் மேலும் அதிகரிக்கும் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி