1999 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 17, 2012

1999 உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுபடுத்த தமிழக அரசு நிதி ஒதுக்கீடு

தமிழக அரசின் செய்தி வெளியீட்டு எண். 414 நாள். 17.07.2012 பதிவிறக்கம் செய்ய...

தமிழக அரசு அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், அனைவருக்கும் கணினி வழி கல்வி அளிக்கும் திட்டம் 5 ஆண்டு காலத்தில் 1880 மேல்நிலைப் பள்ளி மற்றும் 461 உயர்நிலைப் பள்ளி என மொத்தம் 2341 பள்ளிகளில் BOOT அடிப்படையில் நடைமுறைப்படுத்த  ஏற்கெனவே முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 31 கோடியே 21 லட்சம்ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி வழி கல்வியினை பள்ளிகளில் ஊக்குவிக்கும் வகையில் மேலும் 374 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 1625 உயர்நிலைப் பள்ளிகள் ஆக மொத்தம்1999 பள்ளிகளில் கணினி வழி கல்வியை விரிவுப்படுத்த முதலமைச்சர் தற்போது உத்தரவிட்டுள்ளார்.  இத்திட்டம் 127 கோடியே 94 லட்சம் ரூபாய் செலவில் 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 26 கோடியே 65 லட்சம்ரூபாய் ஒப்புதல் வழங்கி முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார். அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கணினி மூலம் கல்வியினை பயின்று, தங்களதுஅறிவாற்றலையும் திறனையும் வளர்த்துக் கொண்டு அகில இந்திய மற்றும் உலகளாவிய அளவில் நடத்தப்படும்  போட்டித் தேர்வுகளில் முதன்மை நிலை பெற வாய்ப்பு உருவாகும் என்று தமிழக அரசுஅனுப்பியுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி