ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வில் 1% பேர் கூட தேர்ச்சி பெறவில்லை!

ஜுலை 12ம் தேதி நடைபெற்ற டெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.இதில் 1%க்கும் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளனர்.டிஇடி எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த ஜுலை12ம் தேதி நடத்தப்பட்டது.மொத்தம்2தாள்களாக இந்தத் தேர்வு நடத்தப்பட்டது.இந்த2தாள்களையும் மொத்தமாக6,76,773பேர் எழுதினர்.முதல் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை2,88,588பேர்.அவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள்1,735பேர்.இரண்டாம் தாளை மட்டும் எழுதியவர்கள் எண்ணிக்கை3,88,185பேர்.இதில் தேர்ச்சி பெற்றவர்கள்713பேர்.அந்த வகையில்2தாள்களிலும் சேர்ந்து2,448பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.2தாள்களிலும் சேர்த்து தேர்ச்சி பெற்றவர்கள்83பேர் மட்டுமே.இதனடிப்படையில்,இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை1%ஐ கூட தாண்டவில்லை என்பது கவனிக்கத்தக்கது.அதிகம் பகுப்பாய்வு அடிப்படையில் கேட்கப்பட்ட கேள்விகளை எழுதுவதற்கு போதுமான நேரம் ஒதுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு,தேர்வர்கள் மத்தியில் பரவலாக எழுந்ததும் குறிப்பிடத்தக்கது.தேர்ச்சி விகிதம் இந்தளவிற்கு குறைவாக இருப்பதால்,தற்போதைய காலியிடங்களுக்கான ஆசிரியர்களை பணியமர்த்துவதில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.நேர்முகத் தேர்வுக்குக்கூட அழைக்க ஆளில்லாத நெருக்கடி நிலவுகிறது.இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மட்டும், வரும் அக்டோபர் 3ம் தேதி மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மறுதேர்வுக்காக மீண்டும் விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மறுதேர்வில், 30 நிமிட நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்விரிவான விபரங்களை அறியwww.trb.tn.nic.inஎன்ற இணையதளம் சென்று காண்க.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி