அரசு ஊழியர்களின் கோரிக்கைகளைநிறைவேற்றாவிட்டால் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் இணைந்து விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் தமிழ்ச்செல்வி தெரிவித்தார்.திருவாரூரில் நேற்று மக்கள் நலப்பணியாளர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாநிலத் தலைவர் தமிழ்ச்செல்விகூட்டத்திற்கு பின் நிருபர்களிடம் கூறியதாவது:பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களை உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும். புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தில் உள்ள முறைகேடுகளைகளைய வேண்டும். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு பணி நியமனங்கள் உடனடியாக செய்யப்பட வேண்டும்.இறந்த அரசு ஊழியர்களின் குடும்பத்தில் கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு காத்திருப்போர் அனைவருக்கும் நிபந்தனையின்றி உடனே பணி நியமனம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து விரைவில்போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு தமிழ்ச்செல்வி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி