காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 23, 2012

காலியாக உள்ள பகுதிநேர ஆசிரியர்களை நிரப்ப நடவடிக்கை

எஸ்.எஸ்.ஏ., மூலம் நியமிக்கப்பட்ட 16 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர் பணியிடங்களில், பல்வேறு காரணங்களால் 1200 பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. மத்திய அரசின் கட்டாயக் கல்விஉரிமைச் சட்டத்தின் கீழ், மனிதவள மேம்பாட்டு துறை சார்பில், அனைவருக்கும் கல்வி திட்டம் மூலம், மாத சம்பளம் அடிப்படையில் கணினி, தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட 16 ஆயிரம், பகுதிநேர ஆசிரியர்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.பதிவு மூப்பு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில், மாநிலம் முழுவதும் 15 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட்டுள்ளன. பணி கிடைத்தும் பல்வேறு காரணங்களால் மாநிலம் முழுவதும் 1200 பணியிடங்கள்நிரப்பப்படமால் உள்ளதாக செய்திகுறிப்புகள் வெளியாகி உள்ளன.இப்பணியிடங்களை தகுதியுள்ளஆசிரியர்கள் மூலம் விரைவில் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்பில் தேர்வு செய்தவர்களை அழைப்பதா? அல்லது தகுதி அடிப்படையில் புதிதாக தேர்வு செய்வதா? என்று கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி