அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 27, 2012

அக்டோபர் 4ம் தேதி பள்ளிகள் திறப்பு

காலாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின், அக்., 4ம் தேதி, அனைத்துப் பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில், பெரும்பாலான வகுப்புகளுக்கு, 21ம் தேதியுடன் காலாண்டுத் தேர்வுகள் முடிவடைந்தன.ஒன்பதாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, நேற்று முன்தினத்துடன், தேர்வுகள் முடிந்தன. ஒரு வார விடுமுறைக்குப் பின், அக்., 3ம் தேதி, மீண்டும் பள்ளிகளை திறப்பதற்கு, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்திருந்தது.ஆனால், அந்த தேதியில், டி.இ.டி., தேர்வு நடப்பதாக அறிவித்ததால், 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, அக்., 14க்கு, டி.இ.டி., தேர்வு தள்ளி வைக்கப்பட்டதால், பள்ளிகள் ஒரு நாள் முன்னதாக, 3ம் தேதியே துவக்கப்படுமா என தெரியாமல், பள்ளி நிர்வாகங்களும், ஆசிரியர்களும் தவித்து வந்தனர். இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் கேட்டபோது,"ஏற்கனவே அறிவித்த தேதியில், எவ்வித மாற்றமும்கிடையாது. திட்டமிட்ட படி, அக்., 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்' என, தெரிவித்தனர். தொடக்க கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளும், இதே தேதியில் துவங்குகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி