ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2012

ஒருநாள் பயிற்சிக்காக காலாண்டு விடுமுறை இழக்கும் ஆசிரியர்கள்


இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக செல்லும் தென் மாவட்ட ஆசிரியர்கள், காலாண்டு விடுமுறைக்கு சொந்த ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், மங்களூர் வட்டாரத்தில், தென் மாவட்டங்களான, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். காலாண்டுத் தேர்வு முடிந்து, நாளை முதல், 30ம் தேதி வரை, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்களது சொந்த ஊருக்கு விடுமுறையில் செல்ல, ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், கடலூர் மாவட்ட ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், வடலூரில் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

வரும், 27ம் தேதி, இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும்; 28ம் தேதி, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பட்டதாரி ஆசிரியர்களும்; 29ம் தேதி, தலைமையாசிரியர்களும் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதனால், தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், விடுமுறைக்கு ஊருக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, தென் மாவட்ட ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் குறித்த பயிற்சி முகாம், தமிழகம் முழுவதும் நடக்கிறது. விடுமுறையில் நடைபெறுவதால், அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள், அங்கு நடக்கும் முகாமில் பங்கேற்க, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி