அண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 20, 2012

அண்ணாமலை பல்கலையில் தொடரும் உண்ணாவிரதம்

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கால பாடப் பிரிவுக்கு உரிய அங்கீகாரம் வழங்கக் கோரி நேற்று மூன்றாம் நாளாக மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு பாடப்பிரிவுகள் (இன்டகிரேட் கோர்ஸ்) நடத்தப்பட்டு வருகிறது. இப்பாடப் பிரிவுகள் அரசு அனுமதியின்றி நடத்தப்படுவதாக கூறி ஒருங்கிணைந்த ஐந்தாண்டு கலை மற்றும் அறிவியல் பாடப் பிரிவு மாணவ, மாணவியர் கடந்த 17ம் தேதி பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர்.மூன்றாவது நாளான நேற்று, பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் பேராசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், மாணவர்கள் எதையும் கேட்காமல் கோஷம் எழுப்பினர். பேச்சு வார்த்தையின் போது, ஆத்திரமடைந்த பல்கலைக்கழக முன்னாள் மாணவர் பிரகாஷ் என்பவர், தனது சான்றிதழ்களை வீசியெறிந்து, "வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவே தயாராக இல்லை&' என, ஆவேசமாகக் கூறி வெளியேறினார். அதிருப்தியடைந்த பேராசிரியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளமாணவர்கள் மயக்கமடைந்தால், அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி