ஆசிரியர் தகுதித் தேர்வு: தற்போது பி.எட்.,முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 23, 2012

ஆசிரியர் தகுதித் தேர்வு: தற்போது பி.எட்.,முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்

ஆசிரியர் தகுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மட்டுமின்றி தற்போது பி.எட்., படிப்பை புதிதாக படித்தவர்களும் தேர்வெழுதலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதிதாக பி.எட்., படித்தவர்களும் தேர்வெழத அனுமதி அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தனர். அதன்படி மனுக்கள் நேற்று விசாரனைக்கு வந்தது. இந்த கோரிக்கை குறித்து  ஜூலை மாதத்திற்குப் பின் பி.எட்.,படிப்பை முடித்தவர்களும் இத்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விண்ணப்பதாரர்கள் செப்.,24ம் தேதி முதல் 28ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கேற்ப ஆசிரியர் தகுதித்தேர்வு தேதி மாற்றி அமைக்கப்படுவதாகவும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 3ம் தேதி நடப்பதாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இது அக்டோபர் 14ம் தேதிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி