மாற்றுத்திறனாளி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி அறிவியல் பாடம் நடத்தப்படும் என, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசு செயலர், கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்தார்.தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளி நிர்வாகம், பிளஸ் 1 வகுப்பில் படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சிறப்பு கணினிஅறிவியல் பாடம் நடத்துவதை, திடீரென நிறுத்தியது. அங்கு பயிலும், புவனேஸ்வரி என்ற மாணவியின் தந்தை, மீண்டும், கணினி அறிவியல் பாடம் நடத்தக்கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம்,மாணவர்களின் விருப்பத்திற்குஏற்ப, பாடத்தைத் தொடர உத்தரவிட்டது. இதையடுத்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைகமிஷனர், பள்ளி நிர்வாகத்திற்கு, கணினி அறிவியல் பயில, விருப்பக் கடிதம் அளிக்கும் மாணவர்களுக்கு, பாடம் நடத்த உத்தரவிட்டார்.தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும், 23 மாற்றுத்திறனாளி மாணவர்களில், 20 பேர், சிறப்பு கணினி அறிவியல் பாடம் நடத்துவதற்கு விருப்ப கடிதம் கொடுத்தனர்.மாணவர்களின் விருப்ப கடிதத்தை பெற்ற பள்ளி நிர்வாகம், மாணவர்களின் நிலை குறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு தெரியப்படுத்தியது. இதுகுறித்து, மாற்றுத்திறனாளி நலத்துறை செயலர், கண்ணகி பாக்கியநாதன் கூறுகையில், பெரும்பான்மையான மாணவர்களின் விருப்பத்திற்குஇணங்க, தர்மபுரி அரசு மேல்நிலைப் பள்ளியில், இனி சிறப்பு கணினி அறிவியல் பாடம்நடத்தப்படும், என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி