50 ஆண்டுகளுக்கு பின் நிரப்பப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 22, 2012

50 ஆண்டுகளுக்கு பின் நிரப்பப்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்கள்

தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், காலியாக இருந்த தலைமையாசிரியர் பணியிடங்கள் 50 ஆண்டுகளுக்கு பின் ஆன்லைன் கவுன்சிலிங் மூலம் இரு நாட்களில் நிரப்பப்பட்டன. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன.தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைmaiசிரியர் சங்க மாநில பொது செயலாளர் சாமி சத்தியமூர்த்தி நேற்று கூறியதாவது: மாநிலத்தில் 2,750 உயர்நிலை பள்ளிகளும், 2,200 மேல்நிலை பள்ளிகளும் உள்ளன. இவற்றில் 700 தலைமை aaசிரியர்கள் பணியிடங்கள், 50 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவே இருந்தன.ஆண்டுதோறும், பொது கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட்டாலும் 700 காலிப்பணியிடங்கள் என்ற எண்ணிக்கை இருந்து கொண்டே இருந்தது. இதை சுட்டிகாட்டி,"தினமலர்' நாளிதழில் பல முறை செய்தி வெளியாகின.இதையடுத்து சிறப்பு முயற்சி மேற்கொண்ட பள்ளி கல்வி துறை அதிகாரிகள், "ஆன்லைன் கவுன்சிலிங்' மூலம், 475 உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர், 145 மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை நிரப்பியுள்ளனர். இதனால், ஆசிரியர்களுக்கு நேரம் மற்றும் பணம் விரயம் தவிர்க்கப்பட்டுள்ளது, என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி