டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு மற்றும்
பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல்
முறையீடு செய்யப்பட்டு சென்னை ஐகோர்ட்டில்
நாளை (26 ம் தேதி)விசாரணை நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் ஏதாவது பட்டப்படிப்பு படித்திருந்தால்
ஒரு ஆண்டில் கூடுதல் பட்டப் படிப்பு (டபுள்டிகிரி) படிக்கும் வசதி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதே போல்,ஏதாவது முதுகலை பட்டம் படித்திருந்தாலும்
ஒரு ஆண்டில் கூடுதல் முதுகலை பட்டமும் பெறும்
வசதி இருந்து வருகிறது.இந்த வசதியின் மூலம்
பட்டங்களை பெற்றவர்கள் கல்வித் துறை பல்வேறு
துறைகளில் புதிய நியமனம், பதவி உயர்வு
போன்றவற்றையும் பெற்று வந்தனர். கடந்த ஒரு சில ஆண்டுகளாக புதிய நியமனம் மற்றும் பதவி உயர்வு மூலம் பலர் பயன் பெற்று வந்தனர்.இதனால் பாதிக்கப்பட்ட ஒரு தரப்பினர் இதுசம்பந்தமாக
சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனையடுத்து பதவி உயர்வு மற்றும் பணி நியமனங்களுக்கு டபுள் டிகிரி பட்டங்கள் செல்லாது என உத்தரவு வெளியானது. இதனால் ஏற்கனவே டபுள்
டிகிரி பட்டங்களை பெற்று பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை
தொடர்ந்து இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
தொடர்ந்து இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில்
தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதி கொண்ட
குழுவிடம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் மேல்
முறையீடு செய்துள்ளனர்.இந்த வழக்கு குறித்த
விசாரணை நாளை (26ம் தேதி)நடத்தப்படுகிறது.வரும்
டிசம்பர் மாதம் 15ம் தேதிக்குள் இந்த உத்தரவு வெளியானால் ஏற்கனவே பதவி உயர்வு பெற முடியாதவர்களும்,ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற முடியாமல்
பாதிக்கப்பட்டவர்களும் பயன் பெறுவர் என்ற
சூழ்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு பலத்த
எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Nov 25, 2012
Home
COURT
டபுள்
டிகிரி' பட்டங்களால்
பதவி உயர்வு மற்றும்
பணி நியமனம்
பிரச்னை தொடர்பான
வழக்கில் மேல்
முறையீடு
டபுள் டிகிரி' பட்டங்களால் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் பிரச்னை தொடர்பான வழக்கில் மேல் முறையீடு
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
"இரட்டைப் பட்டம்" இந்தஐகோர்ட் வழக்கு விசாரணை உத்தரவு வெளியானால் ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற முடியாமல் பாதிக்கப்பட்டவர் பலர் பயன் பெறுவர்..
ReplyDelete