பெரியார் பல்கலைகயில் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 23, 2012

பெரியார் பல்கலைகயில் பழைய பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு!

பெரியார் பல்கலையில், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை வைத்திருக்கும்
மாணவ, மாணவியருக்கு, மீண்டும் பழைய
பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத, தற்போது
வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.பெரியார் பல்கலை சார்பில்
வெளியிடப்பட்ட அறிக்கை: பெரியார் பல்கலை இணைவு பெற்ற கல்லூரிகளில்,கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு படித்து,வெளிசசென்ற மாணவர்கள், தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள்களை,
ஐந்தாண்டுகள் படிப்புக் காலத்துக்குள் முடிக்க வேண்டியது வழக்கம். இவ்வாறு,படிப்பு ஆண்டு,
ஐந்தாண்டுகள் நிறைவடைந்த நிலையில்
உள்ளவர்களுக்கும், அதற்கு முந்தைய ஆண்டில்
பயின்று தேர்ச்சி பெறாத நிலுவைத் தாள் வைத்திருக்கும்
மாணவர்களுக்கும், தற்போது இறுதியாகப்படித்த
பாடத்திட்டத்திலேயே தேர்வெழுத வாய்ப்பு
வழங்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட
விண்ணப்பங்கள், டிச., 14ம் தேதிக்குள், பெரியார்
பல்கலைக்கு வந்து சேர வேண்டும்.விண்ணப்பங்களை தாங்கள் பயின்ற கல்லூரியிலேயே பெற்று, பூர்த்தி செய்து,முதல்வர் வாயிலாக அனுப்ப வேண்டும்.
இதற்கான கால அட்டவணை மற்றும் தேர்வு மைய விவரம் பின்னர் தெரிவிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி