வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 27, 2012

வி.ஏ.ஓ., தேர்வு முடிவை வெளியிட தடை கோரி மனு

வி.ஏ.ஓ.தேர்வு முடிவை வெளியிட தடை கோரி,
மதுரை ஐகோர்ட் கிளையில், மனு தாக்கல்
செய்யப்பட்டது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.முதுகுளத்தூர் அருகே கீழகன்னிசேரி சரவணன் உட்பட, 4 பேர் தாக்கல்
செய்த மனு:
வி.ஏ.ஓ.,க்கள், 3488 பேரை நியமனம் செய்ய,2011 பிப்., 20 ல் தேர்வு நடந்தது. இதில்,ஆதி திராவிடர்களுக்கான,
1077 பின்னடைவு பணியிடங்கள் அடங்கும். நாங்கள்
தேர்வு எழுதினோம்.2011 ஜூலை, 19 ல் முடிவு வெளியிடப்பட்டது.பின்னடைவு பணியிடங்களில்,
270 பேர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டனர்.
பணியில் சேராதவர்கள்,பணியிலிருந்து விலகியவர்கள்,
வேறு வேலைகளுக்குச் சென்றவர்களால் ஏற்படும்,
காலிப் பணியிடங்களில் எங்களை நியமிப்பதாக,
அரசு தெரிவித்தது.மேலும், 1870 வி.ஏ.ஓ.,க்களை நியமிக்க,2012 ஜூலை, 9 ல் அரசு அறிவிப்பு வெளியிட்டது.ஏற்கனவே, பணியில் சேராமல் ஏற்பட்ட,
காலி இடங்களையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.குரூப் 2 தேர்வில்,ஏற்கனவே வி.ஏ.ஓ.,தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும்
பங்கேற்றுள்ளனர். இதனால்,காலிப் பணியிடங்கள்
ஏற்படும். முதலில்,வி.ஏ.ஓ.,தேர்வு முடிவு வெளியிட்டால்,எங்களது உரிமை,பணிவாய்ப்பு பாதிக்கப்படும்.குரூப் 2 தேர்வு முடிவை முதலில்
வெளியிட வேண்டும்.வி.ஏ.ஓ.,தேர்வு முடிவை வெளியிட,தடை விதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு,மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி