புதிதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 20, 2012

புதிதாக நியமனம் செய்யப்பட்ட 20 ஆயிரம் ஆசிரியர் களுக்கு ஜனவரியில் 5 நாள் பயிற்சி.

புதிதாக தேர்வான, 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு,
ஜனவரியில் ஐந்து நாள் பயிற்சி அளிக்க,கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.டி.இ.டி.,தேர்வு வழியாக,
இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர், 18
ஆயிரம் பேர்,முதுகலை தேர்வில்,2,308 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.இவர்களுக்கு, கடந்த, 13ம் தேதி,
பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. இடைநிலை,பட்டதாரி ஆசிரியர் அனைவரும்,
அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில்,பணியில்
சேர்ந்து விட்டதாக,தொடக்க கல்வித்துறை மற்றும்
பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
முதுகலை ஆசிரியர்களுக்கு மட்டும், இன்னும்,பணி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படவில்லை.ஓரிரு நாளில், "ஆன்-லைன்' வழியில்,கலந்தாய்வு நடத்தி,பணி ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட உள்ளன. எனவே,
தேர்வு பெற்ற, 20 ஆயிரம் பேருக்கும்,ஜனவரியில், ஐந்து நாள் பயிற்சியை வழங்க,கல்வித்துறை
திட்டமிட்டுள்ளது.பட்டதாரி ஆசிரியர்களுக்கான
பயிற்சியை, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட இயக்ககம் வழங்குகிறது.கல்லூரி ஆசிரியர்கள்,
அனுபவம் வாய்ந்த பள்ளி ஆசிரியர்களால்,பாட சம்பந்தமாக,மூன்று நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டம்,தகவல் அறியும்
உரிமைச் சட்டம்,முப்பருவ கல்விமுறை,தொடர்
மதிப்பீட்டு முறை,மாணவர்களுக்கான,மத்திய, மாநில
அரசுகளின் நலத்திட்டங்கள் ஆகியவை குறித்து,இரு நாட்களுக்கும்,பயிற்சி அளிக்க,அதிகாரிகள்
திட்டமிட்டுள்ளனர்.தொடக்க கல்வித்துறையில்
சேர்ந்துள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு,
அனைவருக்கும் கல்வி திட்ட இயக்ககம் சார்பில்,
பயிற்சி வழங்கப்பட உள்ளது. இவர்களுக்கும்,ஐந்து நாள்,பயிற்சி அளிக்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி