அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013- க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2012

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர் களுக்கான ஜனவரி 2013- க்கான அகவிலைப்படி உயர்வு 8 முதல் 9 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப் படுகிறது.

அக்டோபர் 2012 மாதத்தில் மத்திய தொழிலாளர் துறை மூலம் வெளியிட்ட இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் (AICPIN) அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றத்தின்
காரணமாக ஜூலை 2012 மாதத்திலிருந்து அக்டோபர் 2012 வரை 5 புள்ளிகள் அதிகரித்து செங்குத்தாக சென்றது.அதேபோல் விலை ஏற்றம் அடுத்த 2
மாதமும் இந்த விலைவாசி தொடர்ந்து உயரும் என்று
எதிர்ப்பார்க்கப்படுகிறது.இந்த சூழ்நிலையில் மத்திய
அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதரர்களுக்கான
அகவிலைப்படி 8% முதல் 9% ஆக உயரக்கூடும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி உயர்வு
ஜனவரி 2013 முதல் உயர்த்தக்கூடும்.அதேபோல் மத்திய அரசு அறிவித்த ஓரிரு வாரங்களில் தமிழக அரசும் உயர்த்தும்.அத்தியாவாசி பொருட்கள்களின்
விலைவாசி உயர்வால் சிக்கி தவிக்கும் மத்திய
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வால்
சற்று நிவாரணம் கிடைக்கும் என்பதால் அகவிலைப்படி
உயர்வை ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றனர்.ஆனால் இந்த அகவிலைப்படி உயர்வு 8%க்கு குறைய
வாய்ப்பில்லை என்று புள்ளி விவரங்கள்
தெரிவிக்கின்றன.ஆகையால் ஜனவரி 2013ல்
குறைந்தபட்சம் அகவிலைப்படி 80% ஆக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி