8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2012

8ம் வகுப்பு தனித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜனவரியில் சான்றிதழ்.

பள்ளியில் முறையாக கல்வி கற்காமல் நேரடியாக 8ம் வகுப்பு எழுதுவோருக்கு "இலவச மற்றும் கட்டாயக் கல்வி சட்டம்" பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.ஓட்டுனர் உரிமம் வேண்டுபவர்கள், ரயில்வே துறையில், அலுவலகங்களில் உதவியாளர் வேலைக்கு செல்பவர்கள் என அனைவருக்கும் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாக கருதப்படுகிறது. இத் தேர்வெழுத வயது வரம்பு இல்லாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 30 வயதிலும் இத்தேர்வை எழுதுகின்றனர்."இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டம்" நேரடி தனி தேர்வுக்கு பொருந்தாது என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. இதன்படி பள்ளிகளில் முறையாக பயிலும் மாணவர்களை மட்டுமே 8ம் வகுப்பு வரை தோல்வியடைய செய்யக் கூடாது என தேர்வுத்துறை அறிவித்தது.இந்த புதிய திட்டம் கடந்த ஏப்ரலில் நடந்த, நேரடி எட்டாம் வகுப்பு தனித்தேர்வில் தேர்வுத்துறை அமல்படுத்தியுள்ளது. இந்த தேர்வில் 22.62 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். இவர்களுக்கு ஜனவரி முதல் வாரத்தில் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி