தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க கூடாது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 18, 2012

தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி அளிக்க கூடாது

தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடைப்
பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும் என்று பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உயர்நிலை,
மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின்
கோரிக்கையை ஏற்று,உபரி பணியிடத்தில் புதியதாக
நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மீள் கலந்தாய்வு நடத்தி முந்தைய கால குறைபாடுகளை நீக்க நடவடிக்கை எடுத்துள்ள முதன்மை கல்வி
அலுவலருக்கு இயக்கத்தின் சார்பில் நன்றி
தெரிவித்துக்கொள்கிறோம்.இதைப்போல,
இயக்கத்தின் மற்ற கோரிக்கைகளை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்கும் படி
கேட்டுக்கொள்கிறோம்.இலவச திட்டங்களை வழங்க
தனி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டும்.
தேர்வு காலங்களில் ஆசிரியர்களுக்கு பணியிடைப்
பயிற்சி வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
கலந்தாய்வில் உபரி பணியிடத்தில் வெளியேற்றப்பட்ட
ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தை பேருந்து,குடிநீர், கழிப்பிட வசதி உள்ள பள்ளிகளில் அமைக்கவேண்டும்.
இவ்வாறு மாவட்ட தலைவர் ஜெயச்சந்திரன்
தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி