ஜன. 29ல் விடுப்பு எடுக்க தலைமையாசிரியர்கள் முடிவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 24, 2013

ஜன. 29ல் விடுப்பு எடுக்க தலைமையாசிரியர்கள் முடிவு.

கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 29ல் நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் முடிவு செய்தனர். மாநிலத்தில் காலியான 35 டி.இ.ஓ.,க்கள் இடங்களை நிரப்ப வேண்டும். உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திய பின்பு, மாணவர்கள்,பள்ளி விவரங்களை ஆன்லைன் மூலம் பதியும் பணியை நடைமுறைப்படுத்த வேண்டும். மாணவர்களுக்கு அரசு திட்டங்களை வழங்க தனியாக ஊழியர்களை நியமிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளைவலியுறுத்தி, அனைத்து சி.இ.ஒ., அலுவலங்கள் முன், போராட்டம் நடத்த உயர்நிலை, மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர். இதில் பங்கேற்க தலைமையாசிரியர்கள் ஒரு நாள் விடுப்பு எடுக்க முடிவு செய்துள்ளனர். பத்தாம் மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு இறுதி திருப்புதல் தேர்வு, செய்முறைதேர்வுகள் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தலைமையாசிரியர்களின் விடுப்பு போராட்டம் நடத்தவுள்ளனர்.சங்க மாநில பொது செயலாளர் சாமிசத்தியமூர்த்தி,கல்வித் துறை இயக்குனரிடம் கோரிக்கை மனு அளித்தோம். நடவடிக்கை இல்லை. பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் சங்கங்களுடன் இணைந்து போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளோம், என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி