4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' அடிக்கும் போராட்டத்தில் மாற்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2013

4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' அடிக்கும் போராட்டத்தில் மாற்றம்.

தமிழ்நாடு மேல்நிலை பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கழகம் சார்பில் பிப்.,2ல், நடக்கும் "மொட்டை' அடிக்கும் போராட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வைப் பாதிக்கும் அரசாணை எண்: 720ல் மாற்றம் செய்யவேண்டும்; 7வது ஊதிய குழுவின் முதுநிலை ஆசிரியர் சம்பள விகிதத்தில் திருத்தம் செய்யவேண்டும்; தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை ராமாவரம்தோட்டம் முன், பிப்.2ல், 4 ஆயிரம் ஆசிரியர்கள் "மொட்டை' போட தீர்மானித்துள்ளனர்.மதுரையில் இருந்து 250 பேர், "மொட்டை' போட உள்ளனர். இந்நிலையில், பிப்.,2ல், மதுரை உட்பட சில மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் இறுதி திருப்புதல் தேர்வுகள் நடக்கின்றன.ஆசிரியர்கள் "மொட்டை' போராட்டத்தால் தேர்வு பாதிக்கப்படும் என சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, "மொட்டை' போராட்டத்தை பிப்.,3 (ஞாயிறு)ல் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. இத்தகவலை,சங்க மாநில அமைப்பு செயலாளர் பிரபாகரன், மதுரை தலைவர் சரவணமுருகன் தெரிவித்தனர்.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி