தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு . - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 23, 2013

தேசிய வாக்காளர் தினம் முன்னிட்டு மிலாடி நபி நாளில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வர வேண்டும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவு .

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மிலாடி நபி நாளன்று வாக்குச்சாவடி உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள் வர வேண்டும் என கல்வித்துறை செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார். தேசிய வாக்காளர் தினம் வரும் 25ம் தேதி நாடு முழுவதும் கொண்டப்படுகிறது. இந்த நாளில் வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றுள்ள வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் வரும் 25ம் தேதி மிலாடி நபி வருவதால் அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் அன்றையை தினம்வாக்காளர் பட்டியல் தொடர்பான விவரங்கள் பாதிக்கப்படும் என கருதப்பட்டது.இந்நிலையில் இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்வித் துறை செயலாளர் சபிதா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:வரும் 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. இந்த தினத்தில் மிலாடி நபி வருவதால் அன்றை தினம் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.இருப்பினும் வாக்குசாவடி உள்ள அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் திறந்து இருக்க வேண்டும். அன்றையை தினத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியர்கள் கண்டிப்பாக பள்ளிக்குவர வேண்டும். தேசிய வாக்காளர் தினம் தொடர்பான விவரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும். இதை ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி