தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 22, 2013

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்ய உத்தரவு.

தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் தகுதித்தேர்வில் (TET) தேர்ச்சி பெறாமல்நியமனம் செய்யப்பட்டுள்ளவர்களின் ஒப்புதலை ரத்து செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகம் முழுவதுமுள்ள அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகள் ( Aided School), சிறுபான்மை (Minority School) மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டுமென குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில் இந்தச் சட்டத்தின் அடிப்படையில், 23-8-2010லிருந்து, அரசு உதவிபெறும் பள்ளிகள், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களின் நியமனத்திற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தால் அந்த நியமனத்தை ரத்து செய்து, அதுதொடர்பான ஆணையினை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் அனுப்ப வேண்டும்.மேலும் அது தொடர்பான விவரங்களையும், ரத்து ஆணையின் நகலினையும் தொலைநகலி மூலம் தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி