வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 29, 2013

வரலாறு, வணிகவியலில் தமிழ்வழி ஒதுக்கீட்டை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை.

முதுகலை ஆசிரியர் தேர்வில், வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில், தமிழ் வழி இடஒதுக்கீட்டை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) நடவடிக்கை எடுத்துள்ளது. போட்டித் தேர்வு அடிப்படையில், சமீபத்தில், 2,300 முதுகலை ஆசிரியர்களை, டி.ஆர்.பி., தேர்வு செய்தது. இவர்கள் அனைவரும், அரசு மேல்நிலைப் பள்ளிகளில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த தேர்வில், தாவரவியல் பிரிவிற்கான ஆசிரியர் தேர்வு செய்யப்படவில்லை. மேலும், தமிழ் வழிக்கான, 20 சதவீத இட ஒதுக்கீடும் நிரப்பப்படவில்லை.இதுகுறித்து, டி.ஆர்.பி., அதிகாரிகள் கூறியதாவது: தாவரவியல் பிரிவில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. தமிழ்வழி இடஒதுக்கீட்டிற்கான இடங்களை நிரப்பவும், பணிகள் நடந்து வருகின்றன. முதுகலை பட்டப் படிப்புடன், பி.எட்., படிப்பை, தமிழ் வழியில் படித்தவர்கள், தமிழ்வழி இட ஒதுக்கீட்டின் கீழ், தேர்வு செய்யப்படுவர்.வரலாறு, பொருளியல் மற்றும் வணிகவியல் பாடங்களில் மட்டுமே, தமிழ்வழி படிப்புகள் உள்ளன. எனினும், எந்தெந்த பல்கலை, கல்லூரிகளில், தமிழ் வழி பாடப்பிரிவுகள் உள்ளன என்ற விவரங்களை, ஆசிரியர் கல்வியியல் பல்கலை மற்றும் உயர்கல்வித் துறையிடம் கேட்டுள்ளோம்; பதில் வரவில்லை. வந்ததும், தமிழ் வழி இட ஒதுக்கீட்டை நிரப்பும் பணி, வேகம் பிடிக்கும். மூன்று பாடங்களிலும், 120 இடங்கள் நிரப்பப்படும். பிப்ரவரி இறுதிக்குள், தாவரவியல் மற்றும் தமிழ்வழி இட ஒதுக்கீட்டிற்கான தேர்வுப் பட்டியலை, வெளியிட திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி