குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 21, 2013

குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகள் வெளியீடு!

குரூப்-1 தேர்வுக்கான தற்காலிக விடைகளை, டி.என்.பி.எஸ்.சி.,வெளியிட்டுள்ளது. விடைகளில், ஆட்சேபம் இருந்தால், அதுகுறித்து, ஒரு வாரத்திற்குள், தேர்வாணையத்திடம் விண்ணப்பிக்கலாம்.துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி., - வணிகவரி உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள, 25 பணியிடங்களை நிரப்ப,கடந்த, 16ம்தேதி போட்டித் தேர்வு நடந்தது. இதில், 1.26 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வின் தற்காலிக விடைகள், தீதீதீ.tணணீண்ஞி.ஞ்ணிதி.டிண என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.விடைகளில் ஆட்சேபம் இருந்தால், ஒரு வாரத்திற்குள், தேர்வர்கள், தங்களது கருத்துக்களை, தேர்வாணையத்திடம் தெரிவிக்கலாம். தேர்வர்களின் ஆட்சேபணைகள் குறித்து, ஆய்வு செய்து, அதனடிப்படையில், இறுதி விடைகள் வெளியிடப்படும்.வி.ஏ.ஓ., மதிப்பெண் வெளியீடு: கடந்த ஆண்டு, செப்., 30ல், வி.ஏ.ஓ., தேர்வு நடந்தது. 6.5 லட்சம் பேர் பங்கேற்ற, இந்த தேர்வின் மதிப்பெண்கள், தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுஉள்ளன. மேலும், மூன்று கட்ட, "கட்-ஆப்" மதிப்பெண் விவரங்களும், இனசுழற்சி வாரியாக வெளியிடப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி