இன்று போலியோ சொட்டு மருந்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2013

இன்று போலியோ சொட்டு மருந்து.

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட 70 லட்சம் குழந்தைகளுக்கான இரண்டாம் தவணை போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.கடந்த ஜனவரி 20-ம் தேதியன்று தமிழகம் முழுவதும் நடைபெற்ற முதல் தவணை போலியோ முகாம் மூலம் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட்டது. தற்போது இரண்டாவது தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க தமிழக பொது சுகாதாரத் துறை ஏற்பாடு செய்துள்ளது.2 லட்சம் ஊழியர்கள்: தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 2 லட்சம் பேர் மூலம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதற்காக ஆரம்ப சுகாகார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் உள்ளிட்டஇடங்களில் மொத்தம் 40 ஆயிரம் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி