அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதி ஏற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 27, 2013

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த உறுதி ஏற்பு

அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.தமிழகத்தில் சிபிஎஸ்சி தவிர்த்து மற்ற அனைத்து பாடத் திட்டங்களும் தற்போது சமச்சீர் கல்வி முறையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.இந்நிலையில், இந்த கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும்தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறை இணைந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.திருச்சி மாவட்டத்தில் உள்ள 192 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் திங்கள்கிழமை காலை நடைபெற்ற இறை வழிபாட்டில், தொடக்கக் கல்வியில் தமிழக அரசு வழங்கும் அனைத்து நலத் திட்டங்கள், சலுகைகள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துக் கூறி, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் என்றார் அனைவருக்கும் கல்வி இயக்கக் கூடுதல் முதன்மைக் கல்விஅலுவலர் வெ. ஜெயக்குமார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி