அகில இந்திய அளவில், இன்று துவங்கி இரு நாட்கள் நடக்கும், பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவளிப்போம்; ஆனால், பணிக்கு செல்வோம் என, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.இதுகுறித்து, சங்க பொதுச் செலயர் ஜான்வெஸ்லி வெளியிட்ட அறிக்கை: மத்திய தொழிற்சங்கங்கள், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றன. இதற்கு, தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் ஆதரவு அளிக்கிறது. ஆனால், சங்க உறுப்பினர்கள் வேலை நிறுத்தத்தில், பங்கேற்க மாட்டார்கள்.கோரிக்கைகள் அடங்கிய அட்டையை அணிந்து, மத்திய, மாநில அரசுகள் ,கோரிக்கைகள் மீது, விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, வலியுறுத்தி பணிக்கு செல்வர். இவ்வாறு அறிக்கையில் ஜான்வெஸ்லி கூறியுள்ளார்."மத்திய தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள, இரு நாட்கள் பொது வேலை நிறுத்தம், அரசியல் உள்நோக்கம் கொண்டது. இதில், தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம் பங்கேற்காது" என, சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேசன் கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி