10-ம் வகுப்பு கணிதத் தேர்வுக்கு உரிய கேள்விகள் எளிதாகஇருக்கும் வகையில் புதிய கேள்வி முறையை கல்வித் துறை வடிவமைத்து அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.ஏப்ரல் 5: தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு வரும் புதன்கிழமை (மார்ச் 27) தொடங்குகிறது. மொத்தம் 12 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதவுள்ளனர்.கணிதத் தேர்வு வரும் ஏப்ரல் 5-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில் கணிதத் தேர்வுக்கான வினாத் தாளில் கேள்விகள் கேட்கும் முறை எளிதாக அமையும் வகையில் மாணவர்களுக்குச் சாதகமாக மாற்றங்களை கல்வித் துறை செய்துள்ளது.மாற்றம் என்ன?புதிய திட்டத்தின்படி "ஏ' பிரிவில் 1 மதிப்பெண் வழங்கப்படும் 15 கேள்விகளும் புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு கேள்வி மற்றும் புத்தக கேள்வியில் இருந்தே கேட்கப்படும்."பி' பிரிவில் 2 மதிப்பெண் கேள்விகளில், கிரியேட்டிவ்கேள்வியாகவும் கட்டாய கேள்வியாகவும் இருந்த 30-வதுகேள்வி, இப்போது புத்தகத்தில் உள்ள கேள்வியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு பதில், கேள்வி எண் 16 முதல் 29 வரை உள்ள 2 மதிப்பெண் கேள்விகளில் 2 கேள்விகள் கிரியேட்டிவ் கேள்விகளாகக் கேட்கப்படும்."சி' பிரிவில் கட்டாய கிரியேட்டிவ் கேள்வியாக இருந்த கேள்வி எண் 45, இனி புத்தகத்தில் இருந்து கேட்கப்படும். அதற்கு பதில் 31 முதல் 44 வரை உள்ள கேள்விகளில் 2 கேள்விகள் கிரியேட்டிவ் கேள்விகளாகக் கேட்கப்படும்.கடந்த ஆண்டிலிருந்து மாறுபட்டு, இந்த ஆண்டு அனைத்துப் பாடங்களிலிருந்தும் கிரியேட்டிவ் கேள்விகள் கேட்கப்படும்.இந்த புதிய கேள்வி வடிவமைப்பு காரணமாக இந்த ஆண்டு ஏராளமானமாணவர்கள் கணிதத்தில் தேர்ச்சி பெறுவார்கள் என்றும்,"சென்டம்' வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் இத்தகைய கேள்வி வடிவமைப்பு மாற்றங்கள் குறித்து கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில் கல்வித் துறை செயல்பட வேண்டும் என்று தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி