2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன:அமைச்சர் முனுசாமி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

2 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன:அமைச்சர் முனுசாமி.

தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் சுமார் 2 லட்சம்அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப் பட்டதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், அவசர பொதுமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கொண்டு வந்தன.அதில் பேசிய, மார்க்சிஸ்ட் உறுப்பினர் சவுந்தரராஜன், தமிழக அரசின் பல்வேறு துறைகளின் காலிப்பணியிடங்களைப் பட்டியலிட்டார். ஆனால், உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி. முனுசாமி இதனை மறுத்தார்.முன்னதாக தமிழகம் முழுவதும் அரசு பணியிடங்கள் லட்சக்கணக்கில்நிரப்பப்படாமல் இருப்பதாக சட்டப் பேரவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. பல்வேறு நலத் திட்டங்கள்மக்களை எளிதில் சென்றடைய இந்த காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டியது அவசியம் என்று அந்த கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்குணசேகரன் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி