மாநகராட்சி இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்காக வேலை வாய்ப்புஅலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட உள்ளவர்களின் உத்தேசப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர்வெளியிட்ட செய்தியில்:-சென்னை மாநகராட்சியால் அறிவிக்கப்பட்ட 40 இளநிலை உதவியாளர்காலி பணியிடங்களுக்கு பதிவு மூப்பு உள்ளவர்களை, சாந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகம் பரிந்துரை செய்ய உள்ளது.இளங்கலை பட்டம் பயின்று, வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்கள் இப்பணியிடங்களுக்கு தகுதியானவர்கள். அதன் படி, 1-8-2012 தேதியில் 30 வயதுக்குள்பட்ட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளனர்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை. பதிவு மூப்பு அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்டவர்களின் உத்தேசப் பட்டியல் சாந்தோம் வேலை வாய்ப்பு அலுவலகத்தின் அறிவிப்புப் பலகையில் வெளியிடப்பட்டுள்ளது.பரிந்துரைக்கப்பட்டவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் வரும் ஏப்ரல் 4-ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி