தமிழுக்கு முக்கியத்துவம்: டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

தமிழுக்கு முக்கியத்துவம்: டி.என்.பி.எஸ்.சி.க்கு தமிழக அரசு கடிதம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் போட்டித் தேர்வுகளில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்குமாறு தமிழக அரசு கடிதம் எழுதியிருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வைகைச்செல்வன் தெரிவித்தார்.சட்டப்பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற 2013-14-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் எம்.எச். ஜவாஹிருல்லா (ராமநாதபுரம்), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் அ. சௌந்திரராசன் ஆகியோர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அவர் பேசியது:டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் திறனறிவுத் தேர்வுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு தமிழ் மொழிப் பாடத்துக்கான மதிப்பெண்கள் குறைக்கப்பட்டன. சிலதேர்வுகளில் தமிழ் மொழிப் பாடம் நீக்கப்பட்டது.இது குறித்து அரசின் கவனத்துக்கு வந்ததும் தமிழ் மொழிப் பாடத்துக்கு உரிய முக்கியத்துவம் அளிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி. தலைவருக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி