யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் மாற்றம் ரத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 28, 2013

யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் மாற்றம் ரத்து.

மத்திய அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் தரும் வகையில் செய்யப்பட்ட மாற்றங்கள் ரத்து செய்யப்படுவதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.இன்று மக்களவையில் பேசிய மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, இந்தியாவில் முக்கிய அரசுப் பணிகளை நிரப்புவதற்காக யுபிஎஸ்சிநடத்தும் தேர்வுகளில், ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன.இந்த மாற்றத்துக்கு இந்திய அளவில் பெரும் எதிர்ப்பு எழுந்ததைஅடுத்து, இந்த மாற்றங்கள் ரத்து செய்யப்படுவதாகவும், மொழித் தாள்களின் மதிப்பெண்களை கணக்கிடுவதில் இதுவரை இருந்த முறையே பின்பற்றப்படும் என்றும் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலம் மற்றும் இந்திய மொழிகளுக்கான தேர்வில் எடுக்கும் மதிப்பெண்கள், ரேங்க்கை மதிப்பிட பயன்படுத்தப்பட மாட்டாது. அவ்விரு மொழிகளிலும் ஒருவர் பெற்றுள்ள திறனை அறிந்து கொள்ள மட்டுமே அத்தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி