ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தகுதித்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெற்று, பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், சம்பளமின்றி தவிக்கின்றனர். 2012 நவம்பரில் தேர்வான இவர்கள், காலிப்பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர்.தற்போது, இவர்கள், சம்பளமின்றி தவித்து வருகின்றனர். கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "" காலிப்பணியிடங்கள் மாவட்டத்தில் இல்லாத நிலையில், பணிகளில் ஆசிரியர்கள் உள்ளனர். இவர்களுக்கு சம்பளம் நவ., முதல் வழங்கப்படாமல் உள்ளது. இந்த மாதத்தில் அதிக ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறும் நிலையில், காலிப்பணியிடங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அடுத்த மாதம் முதல் அனைத்து ஆசிரியர்களுக்கும் சம்பளம் கிடைக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி