ஜூன் மாதத்துக்குள் சுய விவரங்களை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கஅறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 24, 2013

ஜூன் மாதத்துக்குள் சுய விவரங்களை ஓய்வூதியர்கள் சமர்ப்பிக்கஅறிவிப்பு.

ஓய்வூதியர்கள் தங்களது முழு விவரங்களை வரும் ஜூன் மாதத்துக்குள் கருவூலத்தில் சமர்ப்பிக்காவிட்டால், ஆகஸ்ட் மாதத்திலிருந்து ஓய்வூதியம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாவட்டக் கருவூல அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் ஓய்வூதியம் பெறும் அனைத்து ஓய்வூதியர்கள் தங்களது 2013-14-ஆம் நிதி ஆண்டுக்கானநேர்காணலுக்காக வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் வரை அனைத்து வேலை நாட்களிலும் காலை 10 மணி முதல் மதியம் 2மணி வரை அவரவர் ஓய்வூதியம் வாங்கும் கருவூலங்களுக்கு நேரில் வர வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது, தனி தாளில் தங்களது பெயர், ஓ.கொ.எண். வங்கியின் பெயர், முகவரி, வருமானவரி கணக்கு(பான்கார்டு) எண், தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, ஆதார் கார்டு எண் ஆகியவற்றைக் குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட பிரிவு கணக்கரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.நேர்காணலுக்கு வர இயலாத ஓய்வூதியர்கள், ஆயுள் சான்றிதழ் படிவத்தை உரிய அதிகாரிகளிடம் பெற்று சம்மந்தப்பட்ட கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவம் கருவூல இணையதளத்தில் உள்ளது. இந்த நேர்காணலுக்கு வராத அல்லது ஆயுள் சான்று கொடுக்காதவர்களுக்கு வரும் ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி