சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 28, 2013

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை மாநகராட்சி சார்பில் புதிதாக 10 மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும் என்றும், 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி விரிவுபடுத்தப்படும் என்றும் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.சென்னை மாநகராட்சியின் சாதாரண மன்ற கூட்டம் மாநகராட்சி ரிப்பன் கட்டிடத்தில்  நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு தொடங்கிய மன்றக் கூட்டத்திற்கு மேயர் சைதை துரைசாமி தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கேள்வி நேரம் தொடங்கியது.கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற விவாதம் வருமாறு:–பி.சாந்தி(அ.தி.மு.க): சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படுமா?சைதை துரைசாமி: தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு வகுப்புகள் மாலை நேரங்களில், அதாவது பள்ளி முடிந்த பிறகு பயிற்றுவிக்க பரிசீலனை செய்யப்படும்.இவ்வாறு விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.அதைத்தொடர்ந்து மேயர் சைதை துரைசாமி மன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவோடு 133 தீர்மானங்களை நிறைவேற்றினார். அவற்றில் முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:–* சென்னையில் 30 மழலையர் பள்ளிகள் நல்லமுறையில் இயங்கி வருகின்றது. 2013–14–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி வரும் கல்வியாண்டில் திருவொற்றியூர், அரும்பாக்கம், திரு.வி.க.நகர், எம்.ஜி.ஆர்.நகர், திருவல்லிக்கேணி உள்பட 10 இடங்களில் புதிதாக மழலையர் பள்ளிகள் தொடங்கப்படும்.* 2013–2014–ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையின்படி,வரும் கல்வியாண்டில் கொளத்தூர், கோபாலபுரம், இந்திரா நகர், வியாசர்பாடி, சின்னாண்டி மடம், அமைந்தகரை உள்பட 20 மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி விரிவுபடுத்தப்படும்.மேற்கொண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி