பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2013

பிற்பட்டோர், சிறுபான்மையின மாணவர் விடுதிகளுக்கு 178 கோடி ஒதுக்கீடு.

பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், கட்டணமின்றி, விடுதிகளில் தங்கி படிக்க, 178 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ், 1,294 விடுதிகள் இயங்குகின்றன. இவற்றில், பிற்பட்டோர், மிகப்பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், எவ்வித கட்டணமும்செலுத்தாமல் தங்கி படிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது, 80,064 மாணவ, மாணவியர் தங்கி படிக்கின்றனர். மாணவர்களுக்கு, மாதம் தோறும் உணவு மற்றும் பலவகை செலவின கட்டணங்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு, 2013-14ம் ஆண்டு, 178 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.இலங்கை தமிழர்களின் குழந்தைகளும், இந்த விடுதிகளில் தங்கி படிக்க, ஒவ்வொரு விடுதியிலும், 5 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக, பிற்பட்டோர், மிகப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, கொள்கை விளக்க குறிப்பில், தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி