பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 30, 2013

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது: இன்று நள்ளிரவு முதல் அமல்.

பெட்ரோல் விலையை நிர்ணயித்து கொள்ளும் உரிமையை இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு மத்திய அரசு கொடுத்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாதமும் 15 மற்றும் 30-ந்தேதிகளில் சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.தற்போது கச்சா எண்ணை விலை வீழ்ச்சி காரணமாக கடந்த மாதம் முதல் பெட்ரோல் விலை குறைந்து வருகிறது. இதுவரை லிட்டருக்கு ரூ.4.65 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த வாரம் நிலவரப்படி சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை மேலும்குறைந்துள்ளது. மேலும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் திருப்திகரமாக உள்ளது.இதன் காரணமாக பெட்ரோல் விற்பனையில் இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை. இதனால் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 ரூபாய் (உள்ளூர் வரிகள் தவிர) குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலைக் குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்று எண்ணை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69.08க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு ரூ.3.18 குறைந்து ரூ.65.90க்கு விற்பனை செய்யப்படும். இதேபோல் டெல்லியில் ரூ.63.09 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.70.35 ஆகவும், மும்பையில் ரூ.69.73 ஆகவும் பெட்ரோல் விலை குறைந்துள்ளது. இந்த மாதத்தில் 3-வது முறையாக பெட்ரோல் விலை குறைந்துள்ளது. கடைசியாக கடந்த 15-ம் தேதி லிட்டருக்கு ஒரு ரூபாயும், அதற்கு முன்னர் 85 பைசாவும் குறைந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி