எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மே, 5ம் தேதி முதல் வழங்கப்படுகிறன. தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், சேர்க்கை விண்ணப்பங்கள், மே, 20ம்தேதி வரை, வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, மே, 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.ஜூன் 20ம் தேதிக்கு முன், மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க, மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட, 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இவற்றில், 2,145 இடங்கள் உள்ளன.இதில், 1,823 இடங்கள் மட்டும், தமிழக மாணவ, மாணவியரைக் கொண்டு நிரப்பப்படும். மீதமுள்ள இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களும், கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். திருவண்ணாமலையில், இந்த ஆண்டு, புதிய மருத்துவக் கல்லூரி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சில அரசு மருத்துவக் கல்லூரிகளில், கூடுதல் இடங்களுக்கு, மருத்துவ கவுன்சில் அனுமதி அளிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 250 இடங்கள் வரை, கடைசி நேரத்தில், கூடுதலாக கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி