கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2013

கற்பித்தலில் புதிய அணுகுமுறை: ஓஎன்ஜிசி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி.

காரைக்கால் மாவட்டம், நிரவியில் இயங்கி வரும் ஓ.என்.ஜி.சி. பொதுப் பள்ளியில் கல்வி கற்பித்தலில் புதிய அணுகுமுறைகள் குறித்து ஆசிரியர்களுக்கான பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.இன்றைய கால நிலைக்கு ஏற்ப கல்வி கற்பித்தலை எவ்வாறு செய்ய வேண்டும் எனவும், புதிய உத்திகள் குறித்தும் விளக்கப்பட்டது.ஆசிரியர்கள் கற்பிப்பதை மாணவர்கள் ஆர்வத்துடன் புரிந்து கொள்ளும் பக்குவத்தை ஏற்படுத்துவது அவசியம் என வல்லுநர்கள் விளக்கினர்.மேலும் தமிழ், ஆங்கிலம், கணினி அறிவியல், கணிதம், அறிவியல் வரலாறு ஆகிய பாடங்களை மாணவர்களுக்கு புதிய அணுகுமுறை மூலம் கற்பித்தல் குறித்தும் வல்லுநர்கள் விளக்கினர். ஆசிரியர்-மாணவர் உறவு முறை எளிதாகி, கற்றலில் புதிய அனுபவத்தை மாணவர்கள் அடைய ஆசிரியர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி