போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 24, 2013

போலீஸ் பல்கலைக்கழகம்: முதல்வர் அறிவிப்பு.

காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு பல்கலைக் கழகம், சென்னை அருகே அமைக்கப்படும்" என முதல்வர், ஜெயலலிதா சட்டசபையில்அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிவிப்பு: தமிழக காவல் துறை பாரம்பரியம் மிக்க அமைப்பு. மேலும், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய பல்வேறு திட்டங்கள், தமிழகத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. காவல் பணிகளில், கருத்தாற்றலிலும், செயல் திறமையிலும் முதன்மை மாநிலமாக, தமிழகம் விளங்குகிறது.தமிழக காவல் துறை பற்றிய உயர் கல்வியை, சீராக வடிவமைத்து வழங்க,சென்னைக்கு அருகில், காவல் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு சம்பந்தப்பட்ட, உயர் மட்ட கல்விக்கான ஒரு பல்கலைக் கழகம், இந்த நிதியாண்டில் தோற்றுவிக்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா அறிவித்தார்.போலீசாருக்கு பயிற்சியளிக்க, காவல் பயிற்சிப் பள்ளிகள், காவல் அகடமி ஆகியவை, செயல்பட்டு வருகின்றன. இது தவிர, குற்றங்கள் பற்றியும், குற்றப் புலனாய்வு பற்றியும் படிக்க விரும்வோருக்கு,சென்னை பல்கலைக் கழகம் உள்ளிட்ட சில பல்கலைக் கழகங்களில்,"கிரிமினாலஜி" எனும் படிப்பு உள்ளது. இது தவிர, "போலீஸ் நிர்வாகம்" குறித்த பட்ட மேற்படிப்பும் வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி